சிறுகதைப் போட்டி எண் - 2
எழுதியவர் - சரவணன் ஆர்.எஸ்.கே
இன்றோடு மூன்று நாட்கள் ஆகிவிட்டன. முத்து காணாமல் போய்விட்டான். காணாமலே போய்விட்டான்.
காலையில் எழுந்ததும் நேரே செந்தில் வீட்டை நோக்கி நடந்தேன். எதிர்பார்த்த மாதிரியே செந்திலும் வீட்டு வாசலில் லுங்கியில் உட்கார்ந்திருந்தான். என்னைப் பார்த்ததும்... வேக வேகமாக எழுந்து வந்து
"என்னாடா முத்து வந்துட்டானா இல்லையா?!"
"எல்லாம் உன்னால தான்... அவன் இன்னும் வரல ... எங்க போய் தொலைஞ்சான்னும் தெரியல , "
"சரி விடுறா... மேட்டரு உனக்கும் எனக்கும் மட்டுந்தானே தெரியும். அத்தோட மறந்திரு ஆமா !" -செந்தில்.
"எல்லாம் உன்னால தான்... அவன் இன்னும் வரல ... எங்க போய் தொலைஞ்சான்னும் தெரியல , "
"சரி விடுறா... மேட்டரு உனக்கும் எனக்கும் மட்டுந்தானே தெரியும். அத்தோட மறந்திரு ஆமா !" -செந்தில்.
மறக்கக் கூடிய விசயமா அது ?!
நல்லா ஞாபகமிருக்கு.
முத்து.
எங்களை விட ரெண்டு வயசு சிறியவன். படிப்பறிவு இல்லாதவன். நாங்க வாரம் ஒருமுறை சரக்கடிக்கும் போதெல்லாம் கூட வந்து உட்கார்ந்துக்குவான். அவன் விதி அன்னிக்கும் வந்தான்.
நல்லா ஞாபகமிருக்கு.
முத்து.
எங்களை விட ரெண்டு வயசு சிறியவன். படிப்பறிவு இல்லாதவன். நாங்க வாரம் ஒருமுறை சரக்கடிக்கும் போதெல்லாம் கூட வந்து உட்கார்ந்துக்குவான். அவன் விதி அன்னிக்கும் வந்தான்.
"அண்ணே! இந்தாங்க ஊறுகா பாக்கெட்டு. சிகரெட்டு. மீதி ஒர்ரூவா. " -முத்து
"சரிடா சரிடா. நீயும் ஒரு கட்டிங்ஐப் போட்றியா"- நான் இழிப்புடன்
"ஹி ஹி வேணான்னே "- முத்து.
"டேய் முத்து! நூறு ரூவா தர்றேன் . ஒரு நைட்டு நம்மூரு சுடுகாட்ல தங்கணும் டீலா ?" - செந்தில்
"சரிடா சரிடா. நீயும் ஒரு கட்டிங்ஐப் போட்றியா"- நான் இழிப்புடன்
"ஹி ஹி வேணான்னே "- முத்து.
"டேய் முத்து! நூறு ரூவா தர்றேன் . ஒரு நைட்டு நம்மூரு சுடுகாட்ல தங்கணும் டீலா ?" - செந்தில்
எனக்குப் புரிந்துவிட்டது. செந்திலுக்கு செமையாக ஏறிட்டு. ஆமா, எப்போ நாங்க இந்த வைக்கோல் படப்பு மறைவில சரக்கடிச்சாலும், முத்துவை வைத்து ஏதாவது ஒரண்ட இழுப்பான் செந்தில். இன்னைக்கு இப்படி. ரைட்டு.
"ஆமான்டா.. நானும் தர்றேண்டா நூறு ரூவா... ஆனா செந்தில் சொன்னத பண்ணனும். "
"ஐயையோ ஆள விடுங்கண்ணே... நூறு ரூவாக்கு சாவச் சொல்றீங்களா ? நம்மாள முடியாதுண்ணே "
செந்தில் போதையின் உச்சத்திற்கு போய்விட்டான் என்பது அடுத்தடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் தெரிந்தது.
ஆனால் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டான்.
சம்பவ தினம்.
இரவு பத்து மணி.
நான் , செந்தில் மற்றும் முத்து சுடுகாட்டுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில்...
"டேய் முத்து ! விடியற வரை நாங்க இங்கேயேதான் இருப்போம். மவனே பாதியில திரும்பி வந்த... அவ்வளோதான்.. ஒங்கம்மா சேர்த்து வெச்சிருக்க ரூவால தான் லைஃப் ஃபுல்லா சரக்கு வாங்கித் தரணும். "- ஏறத்தாழ மிரட்டினான் செந்தில்.
இழித்தேன் நான்.
முறைப்புடன் விறுவிறுவென சுடுகாட்டை நோக்கி நடந்தான் முத்து.
அவ்ளோதான்.
அதுதான் முத்துவைக் கடைசியாக நாங்க பார்த்தது.
பாவம் அவன் அம்மா.. மறுநாள் மதியம் வந்து முத்துவைப் பார்த்தீயானு விசாரித்தாள்.
இல்லைனு கூசாம பொய் சொன்னேன். செந்திலும் தான். ஆனா மூணு நாளா காணவில்லைங்கறது பதற்றத்தை உருவாக்கியது.
பின்னே இருக்காதா ! முத்து அவன் அம்மாவிற்கு ஒரே பிள்ளை. அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு.
வருமானத்திற்கு பத்துப் பாத்திரம் தேய்ப்பாள். விறகு வெட்டுவாள். வேற மாதிரி தொழிலும் செய்வதாகக் கேள்வி. ஆனாலும் 25 வயசானாலும் விவரம் புரியாத மகன் முத்து என்றால் அதீத பாசம்.
உண்மையில் என்ன நடந்தது? முத்து சுடுகாட்டுக்குப் போனதைப் பார்த்தோம். கொஞ்ச நேரம் அவன் திரும்பி வர்றானா என காத்திருந்தோம். வரவில்லை.
சுடுகாடு. அந்தபக்கம் காட்டாறு. ஒரேயொரு ஒத்தையடி்பாதை. வந்தால் இந்தப் பாதை வழியாகத்தான் வரணும். வரவேயில்லை.
காலையில் சென்று பார்த்தால் சுடுகாட்டில் முத்துவைக் காணவில்லை.
ஒருவேளைக் காட்டாற்றுல் விழுந்து செத்துகித்துப் போயிருப்பானோ ?!
செந்தில் போதையின் உச்சத்திற்கு போய்விட்டான் என்பது அடுத்தடுத்து அவன் பேசிய வார்த்தைகளில் தெரிந்தது.
ஆனால் எப்படியோ சம்மதிக்க வைத்துவிட்டான்.
சம்பவ தினம்.
இரவு பத்து மணி.
நான் , செந்தில் மற்றும் முத்து சுடுகாட்டுக்குச் செல்லும் ஒற்றையடிப் பாதையில்...
"டேய் முத்து ! விடியற வரை நாங்க இங்கேயேதான் இருப்போம். மவனே பாதியில திரும்பி வந்த... அவ்வளோதான்.. ஒங்கம்மா சேர்த்து வெச்சிருக்க ரூவால தான் லைஃப் ஃபுல்லா சரக்கு வாங்கித் தரணும். "- ஏறத்தாழ மிரட்டினான் செந்தில்.
இழித்தேன் நான்.
முறைப்புடன் விறுவிறுவென சுடுகாட்டை நோக்கி நடந்தான் முத்து.
அவ்ளோதான்.
அதுதான் முத்துவைக் கடைசியாக நாங்க பார்த்தது.
பாவம் அவன் அம்மா.. மறுநாள் மதியம் வந்து முத்துவைப் பார்த்தீயானு விசாரித்தாள்.
இல்லைனு கூசாம பொய் சொன்னேன். செந்திலும் தான். ஆனா மூணு நாளா காணவில்லைங்கறது பதற்றத்தை உருவாக்கியது.
பின்னே இருக்காதா ! முத்து அவன் அம்மாவிற்கு ஒரே பிள்ளை. அப்பா ஆக்சிடென்ட்ல இறந்துட்டாரு.
வருமானத்திற்கு பத்துப் பாத்திரம் தேய்ப்பாள். விறகு வெட்டுவாள். வேற மாதிரி தொழிலும் செய்வதாகக் கேள்வி. ஆனாலும் 25 வயசானாலும் விவரம் புரியாத மகன் முத்து என்றால் அதீத பாசம்.
உண்மையில் என்ன நடந்தது? முத்து சுடுகாட்டுக்குப் போனதைப் பார்த்தோம். கொஞ்ச நேரம் அவன் திரும்பி வர்றானா என காத்திருந்தோம். வரவில்லை.
சுடுகாடு. அந்தபக்கம் காட்டாறு. ஒரேயொரு ஒத்தையடி்பாதை. வந்தால் இந்தப் பாதை வழியாகத்தான் வரணும். வரவேயில்லை.
காலையில் சென்று பார்த்தால் சுடுகாட்டில் முத்துவைக் காணவில்லை.
ஒருவேளைக் காட்டாற்றுல் விழுந்து செத்துகித்துப் போயிருப்பானோ ?!
அதன்பின்தான் லேசாகப் பயம் வந்தது.
முத்துவின் அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் எல்லார் விசாரிப்புகளுக்கும் தெரியாது எனச் சொன்னோம்.
இரவு .
கதவு படபட என தட்டும் ஒலியால் எழுந்தேன்.
முத்துவின் அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் எல்லார் விசாரிப்புகளுக்கும் தெரியாது எனச் சொன்னோம்.
இரவு .
கதவு படபட என தட்டும் ஒலியால் எழுந்தேன்.
கதவு தட்டப்படும் ஓசை, கரண்ட் இல்ல,
எழுந்து வாசலை அடைந்து கதவைத் திறந்தேன்.
இருட்டு.
கரிய உருவம். தலையில் சாக்குப்பையை வேறு போர்த்திக் கொண்டு...
பக்'கென்று இருந்தது.
"உங்களால தானடா நான் சுடுகாட்டிற்குப் போனேன்" -உருவம்
"டே...டேய் முத்தூஉஉ!! எங்கடாப் போயிருந்த மூணு நாளா? -நான்.கேட்டவாறே முத்துவின் கைகளைத் தொட்டேன் ஐஸ்கட்டியைத் தொட்ட மாதிரி இருந்தது.
எழுந்து வாசலை அடைந்து கதவைத் திறந்தேன்.
இருட்டு.
கரிய உருவம். தலையில் சாக்குப்பையை வேறு போர்த்திக் கொண்டு...
பக்'கென்று இருந்தது.
"உங்களால தானடா நான் சுடுகாட்டிற்குப் போனேன்" -உருவம்
"டே...டேய் முத்தூஉஉ!! எங்கடாப் போயிருந்த மூணு நாளா? -நான்.கேட்டவாறே முத்துவின் கைகளைத் தொட்டேன் ஐஸ்கட்டியைத் தொட்ட மாதிரி இருந்தது.
"தொடாதடா ! உங்களால தான்டா நான் சுடுகாட்டுக்குப் போனேன் ... இப்போ இப்படி நிக்கிறேன். " -சொன்னதையே சொன்னான்
எனக்கு வியர்வை ஊற்று எடுத்தது. இவன் முத்து தான். ஆனால் முத்து தானா?!
"ஏன்டா அப்படிச் சொன்னீங்க ?" -முத்து
எனக்கு வியர்வை ஊற்று எடுத்தது. இவன் முத்து தான். ஆனால் முத்து தானா?!
"ஏன்டா அப்படிச் சொன்னீங்க ?" -முத்து
'என்ன சொன்னோம் ?!'
மங்கலாக நினைவு வந்தது.
அன்று...
"முத்து நீ மட்டும் சுடுகாட்ல ஒரு நைட்டு இரு... இந்தா இப்பவே நூறு ரூவா பிடி ! நம்பிக்கை இல்லைனா "-சட்டைப் பையில் ரூபா எடுப்பது போலவே பாவலா காட்டினான் செந்தில் .
"ஆள விடுங்கண்ணே,"- முத்து
"அடிங்க பு**மகனே! ஒங்கம்மா தேவி**னு ஒத்துக்கோ அப்படினா " -செந்தில் போதையேறிட்டாலே இப்படித்தான் ..
முறைத்துப் பார்த்தான் முத்து.
"எங்கம்மாவ தப்பாப் பேசாதீங்கண்ணே "
"கோவம் வருதா , அப்படி ஒங்கம்மா தே**யா இல்லைனா நீ நைட்டு சுடுகாட்ல தங்குறா பாக்கலாம் ",-செந்தில்
" ஆங்... இது பேச்சு " -அழகாக போதையுடன் ஒத்தூதினேன் நான்.
மங்கலாக நினைவு வந்தது.
அன்று...
"முத்து நீ மட்டும் சுடுகாட்ல ஒரு நைட்டு இரு... இந்தா இப்பவே நூறு ரூவா பிடி ! நம்பிக்கை இல்லைனா "-சட்டைப் பையில் ரூபா எடுப்பது போலவே பாவலா காட்டினான் செந்தில் .
"ஆள விடுங்கண்ணே,"- முத்து
"அடிங்க பு**மகனே! ஒங்கம்மா தேவி**னு ஒத்துக்கோ அப்படினா " -செந்தில் போதையேறிட்டாலே இப்படித்தான் ..
முறைத்துப் பார்த்தான் முத்து.
"எங்கம்மாவ தப்பாப் பேசாதீங்கண்ணே "
"கோவம் வருதா , அப்படி ஒங்கம்மா தே**யா இல்லைனா நீ நைட்டு சுடுகாட்ல தங்குறா பாக்கலாம் ",-செந்தில்
" ஆங்... இது பேச்சு " -அழகாக போதையுடன் ஒத்தூதினேன் நான்.
"எங்கம்மாவ பத்திப் பேசப்போய் தானடா நான் போனேன் " -முத்து.
கண்கள் மட்டும் இருட்டில் மின்னியது. கண்ணீரோ ?!
கண்கள் மட்டும் இருட்டில் மின்னியது. கண்ணீரோ ?!
"இல்லடா அது வந்.," நான் முடிக்கும் முன்பே,
"மூட்றா.," என ஒற்றை விரலால் நெஞ்சில் கை வைக்க... மின்னல் பாய்ந்தது போல சுரீர் என்று வலித்தது.
டங்டனடனனன... கட்டில் அருகே வைத்திருந்த தண்ணீர் சொம்பு உருண்ட சப்தம்.
திடுக்கென விழித்தேன். அப்படினா கனவா ?! முத்து வரவில்லை.
ஆனால்
இதயப் பகுதியில் , முத்து சுட்டிய பகுதியில் வலி மட்டும் ... நிஜம். !!!!
வியர்வை ஊற்றெடுக்க வலி அதிகரிக்க , "ய்,..ஆஆஆ!!" அலறியே விட்டேன்.
அடுத்த அறையிலிருந்து அம்மா "என்னடா " எனப் பதறி வர...
ஆட்டோவில் குண்டுகட்டாக என்னை ஏற்றுவது மங்கலாகப் புரிகிறது. அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் முகங்களில் பதற்ற ரேகைகள் தெளிவில்லாமல் உணர்ந்தேன்.
"மூட்றா.," என ஒற்றை விரலால் நெஞ்சில் கை வைக்க... மின்னல் பாய்ந்தது போல சுரீர் என்று வலித்தது.
டங்டனடனனன... கட்டில் அருகே வைத்திருந்த தண்ணீர் சொம்பு உருண்ட சப்தம்.
திடுக்கென விழித்தேன். அப்படினா கனவா ?! முத்து வரவில்லை.
ஆனால்
இதயப் பகுதியில் , முத்து சுட்டிய பகுதியில் வலி மட்டும் ... நிஜம். !!!!
வியர்வை ஊற்றெடுக்க வலி அதிகரிக்க , "ய்,..ஆஆஆ!!" அலறியே விட்டேன்.
அடுத்த அறையிலிருந்து அம்மா "என்னடா " எனப் பதறி வர...
ஆட்டோவில் குண்டுகட்டாக என்னை ஏற்றுவது மங்கலாகப் புரிகிறது. அம்மா , பக்கத்து வீட்டு வாத்தியார் முகங்களில் பதற்ற ரேகைகள் தெளிவில்லாமல் உணர்ந்தேன்.
"என்னப்பா இது... இவன் கூட்டாளி செந்திலுக்கும் நெஞ்சுவலினு இப்போதான் ஆஸ்பத்திரி கொண்டு போறாங்களாம் ... இப்போ இவனுக்குமா ? ." -,வாத்தியார் அருகிலிருந்த யாரிடமோ புலம்புகிறார் போல
நாடித்துடிப்பு குறைவதை உணர்ந்தேன்.
நாடித்துடிப்பு குறைவதை உணர்ந்தேன்.
"27 வயசெல்லாம் ஹார்ட் அட்டாக் வர்ற வயசா ? ! " -வாத்தியார் குரல்.
கடைசியாக நான் கேட்டது அதைத்தான்.
கடைசியாக நான் கேட்டது அதைத்தான்.
(முற்றும்)