Tuesday, December 23, 2014

வரலாற்றில் நாம் - சரித்திரத் தொடர் - 2


வரலாற்றில் நாம்: (நாடகம்)
அத்தியாயம் இரண்டு




நங்கை : காதல் காதல் காதல், வெறும் வாய்ச்சொல்லில் வீரராயிருந்தென்ன பயன்?

கருணா : அடியே நங்கை, இந்த ஒற்றன் வாழ்வில் எனக்குக் கிடைத்த ஒரே வரப்பிரசாதமல்லவா நீ, என்ன செய்வது நீயும் தாய்நாடும் என் இரு கண்களல்லவா. இதோ இப்பொழுது கூட பணி நிமித்தமே இங்கு வந்தேன், ஓடிப் போன மராட்டியர்கள் போக்குக் காட்டிவிட்டு திரும்ப படை எடுக்கத் திட்டமிட்டுள்ளதாக அறிகிறேன், உடனே தளபதி பாலகணேசரிடம் தகவல் கொடுக்க வேண்டும்.

நங்கை : பணி நிமித்தம் வந்தவருக்கு பிறகென்ன காதல் நிமித்தம்? என் மேல் அக்கறையே இல்லையா? கடைசி வரை நீங்கள் காதல் வசனம் மட்டுமே பேசப் போகிறீர்கள்

கருணா : வதைக்காதே நங்கை, தகவலைக் கூறிவிட்டு சடுதியில் வருகிறேன்.

நங்கை : மராட்டியர் குறித்த கவலை உங்களுக்கு வேண்டாம், எங்களின் வீரத் தளபதி போர்ப் பிரபலம் அவர்களை ஒரு கை பார்த்து விடுவார், குதிரையில் செல்லாமல் தேரினில் செல்லும் தகுதி பெற்ற ஒரே தளபதி இந்தத் தென்னகத்திலே எங்கள் போர்ப் பிரபலனார் மட்டுமே என்பதை அறிவீர்தானே?

கருணா : அடிப் பாதகத்தி அப்படியா கதை கட்டியிருக்கிறான், அதன் உண்மைக் காரணம் கூறுகிறேன் கேள், மதுரை நாயக்கப் போரில் விதை உதை வாங்கிய பின் அவனால் குதிரை ஏற முடியாமல் போனது. தேரில் வக்கில்லாமல் சுற்றுவதற்கு இப்படியொரு வியாக்கியானம் கற்பித்துள்ளானா அந்தக் கபட வேடதாரி?

நங்கை : ஐயோ என்ன வார்த்தை சொல்லிவிட்டீர்கள் எங்கள் தளபதியாரை, என்ன இருந்தாலும் வீரர் அவர்.

கருணா : வீரனா? உன்னிடம் சொல்லக்கூடாது தான், காயடித்த காளை வம்ச விருத்திக்கு உதாவது என்பது பெரியோர் கூற்று. மதுரைப் போரில் என்னிடமே அறை வாங்கியவன் அவன், பிறகு கூறுகிறேன் அந்தச் சம்பவத்தை.


இடம் : சிவ மைந்தனின் மதியாலோசனைக் கூடம். போர்பிரபலம் திரு அலறிக் கொண்டே உள்ளே வருகிறார்.

போ.பி.தி : சிவ மைந்தரே கேட்டீரா இந்தக் கூத்தை, மராட்டியரை விரட்ட இந்தக் கிழப் பால கணேசன் நம்மை உடனடியாய்ப் போர்களத்திற்க்கு அழைக்கிறானைய்யா?

சி.மை : ஓ.விஷயம் அப்படிப் போகிறதா? சரி அதனால் என்ன? நமது படையுடன் சென்று மோதுவோமா? தங்களது கருத்தென்ன?

போ.பி.தி : எதற்கையா போர் போர் என்று அலைகிறீர்? உலகிலேயே வலிமையானவனின் ஆயுதம் அஹிம்சை, புத்தனை அறியாத இந்த அற்பக் கூட்டத்தில் மாட்டிக்கொண்டு விழிக்கிறேன் நான்.

சி.மை : இதில் அகண்ட மணியின் நிலைப்பாடு என்ன?

போ.பி.தி : அவன் சித்தம் கலங்கி பித்தம் தலைக்கேறி விட்டதையா? அனுதினமும் கண்ணாடி முன் நின்று கொண்டு போர் ஆமாம் போர் என்று பிதற்றுகிறான். சிவ மைந்தரே போரைப் பற்றி என்னிடம் கேளும் நான் கூறுகிறேன், வேண்டாமைய்யா இந்த விபரீத ஆசை.


அடுத்த பாகத்தில்..
மராட்டிய இளவரசனாக தேசிங்கு கூஜா, மராட்டியத் தளாபதியாக ஷாஜிச் சாமி தோன்றுவார்கள்.

தொடரும்...

மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

No comments:

Post a Comment