Friday, December 26, 2014

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 1

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 1


மதியம் 12 மணி, பேயை பேட்டி எடுக்கச் சென்றேன்..
பேய் பெப்பரப்பேவென தூங்கிக்கொண்டிருந்து,நான் அதன் அருகில் சென்று..பேய் சார் என்றேன்..அது பேயப் பாத்த மாதிரி அலறிக்கொண்டு எழுந்தது..பேயிக்கே பெப்பே காட்டிய என் முக அழகை வியந்து கொண்டே"உங்கள பேட்டி எடுக்க வந்துருக்கேன்"னு சொன்னேன்..
"உன்னோட போட்டிய எடுக்கறக்குள்ள ஒழுங்கா ஓடிப் போயிரு..அவனவன் நைட் டூட்டி பாத்துட்டு அலுப்பா படுத்திருக்கான்..பேட்டியாம் பேட்டி.."
"நீங்க அப்படி சொல்லக்கூடாது..எனக்கு எடிட்டர் கிட்ட ஏத்து விழுகும்..தயவு செய்து இரக்கம் காட்டுங்க பேயி சார்.."
"டேய்..உங்க எடிட்டரையும் சேத்து ரெண்டு காட்டு காட்டிடுவேன்...ஓடிடு.."
"இந்தாங்க பேயி சார்..உங்களுக்காக முக்கா புல்லும்..முறுக்குப் பாக்கெட்டும் வாங்கிட்டு வந்துருக்கேன்..இதை வச்சுகிட்டு ஏதாவது பாத்து பண்ணுங்க சார்.." என்றபடி அதை எடுத்து வைத்தேன்..
பாயைப் பாத்த நாயாக பேயி வாய் நிறைய பல்லானது..
"ஓ.கே..எங்கே மிச்சக் குவாட்டர்..?"
"பேயப் பாக்கப் போறமே தைரியத்துக் இருக்கட்டுமனு அதை நான் அடிச்சுட்டேன் பேய் சார்.."
"சரி சரி கேளு.."
குறலு ஆம்பள மாதிரியும்,காஸ்ட்யூம் பெண் மாதிரியும் இருந்ததால்..
"நீங்க ஆம்பளப் பேயா.?
இல்ல பொம்பளப் பேயா..?"
என்று கேட்டேன்..
உடனே பேய் கழட்டிக் காட்டியது..விக்கைத்தான்..
"எங்கப்பா.. ஆம்பள பேயை மதிக்கறாங்க..அதான் பொம்பள வேஷம் போட்டு சுத்திட்டு இருக்கேன்..அப்பப்ப டராகுலா,டூவ்லைட் னு படங்கள் வந்து நம்ம மானத்தக் காப்பாத்திட்டு இருக்கு.."
"ஓ..சினிமாவெல்லாம் பாப்பிங்களா..!"
"எப்பவாது பாப்பேன்."
"சமீபத்தில் என்ன படம் பாத்தீங்க..?"
"போன வாரம் கூட லிங்கானு ஒரு படம் போனேன்..தியேட்டர் தனியா ஒக்காந்து பாக்க எனக்கே பயமா இருந்துச்சு..பாதிலயே ஓடியாந்துட்டேன்..முந்தாநேத்து நம்ம படமாச்சேனு பிசாசுக்குப் போனேன்..படமா தம்பி எடுத்திருக்காங்க..பேய நாய்குட்டி மாதிரி காட்டிருக்காங்க..வந்த கோவத்துக்கு அந்த மிஷ்கின செவுல்ல அறையலாம்னு அவர் ஆபிஸுக்குப் போனேன்..அந்த ஆளு ஒரு பையனப்பிடுச்சு பேய் கத்து கத்திட்டு இருந்தாரு..மிரணடு திரும்பிட்டேன்.."
சரி நேயர்களே ஒரு சிறிய விளம்பர இடைவேளைக்கு பிறகு மீண்டும் பேயின் பேட்டி தொடரும் என்றேன்..
உடனே பேய்" யோவ்..என்னைய்யா பேப்பருக்கெல்லாம் பிரேக் விடுறீங்க.."
"பேய் சார்..நான் ராஜ் செய்திப் பத்திரிக்கை..அப்படித்தான் விடுவோம்.."
.....stay tune...

No comments:

Post a Comment