Friday, December 26, 2014

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 3

பேயுடன் ஒரு பேட்டி - பாகம் 3

மக்கள் பிரபலம் திரு

முன்பேட்டிச் சுருக்கம்:ஒரு கண்றாவிப் பேயை,ஒரு கழிச்சடை நிருபர் பேட்டி என்ற பெயரில் குப்புறப் போட்டு..கழிம்பு தடவிக் கொண்டிருக்கிறார்.. இனி மனச்சாட்சியே இல்லாமல் மல்லாக்கப் போட்டு மருந்து தடவுவார்..)
நேயர்களே.. இடைவேளையில் எல்லோரும் நல்லா மூனுவேளை சாப்பிட்டு இரண்டு வேளை ஆயி போனீங்களா..? சரி இப்ப நம்ம பேய் சாரோட பேட்டியைத்தொடரலாம்..
"பேய் சார் உங்க ஆண் பேய்களோட சோகத்தைக் கேட்கும்போது எனக்கே முட்டுது அழுகை..எப்படிசார் தாங்கிக்கிறீஙக..?"
"முருக்கைக்காய் சாப்டுற உன்னாலயே தாங்கிக்க முடியலயே..முருக்கைமரத்துலயே குடியிருக்கிற எங்கள நினைச்சுப்பாரு..(அழுகிறார்..சிறிது ஆசுவாசப்படுத்திக் கொண்டு..ஒரு கேள்வியுடன் நிமிர்ந்தார்..)
"ஆமா நீ உண்னையிலயே புலனாய்வுப் பத்திரிக்கையில இருந்துதான் வரியா..?கேள்வி எல்லாம் எதோ அஜால் குஜால் புக் மாதிரி இருக்கு..ஐடியக் காட்டு"
"ஸாரி பேய் சார்..இனி கேட்டப் போற கேள்விகள் ஹாட்டா இருக்கும்..அதான் உங்கள கொஞ்சப் ஃப்ரிகூல் பண்ணுனேன்.."என்றபடி பைக்குள் இருந்து சில பேப்பர்களை எடுத்து வைத்தேன்..
"பேய் சார்..நீங்க நல்ல பேயா இருந்தாலும்..பொதுவா பேய்கள் ரொம்ப அட்ராசிட்டிஸ் பண்ணுதுகளே.."
"எவன் சொன்னான்..?" என்றார் பேய் கோபத்துடன்..
"யாரும் சொல்லள..இந்த பேய்க் கமிஷன் ரிப்போர்ட் சொல்லுது.."
"யோவ் பன்னாட..சொல்றவன் ஆயிரம் சொல்லாம்..எங்க நிலமையில இருந்து பார்த்தா தான் தெரியும்"
"அய்யா நான் வேணும்னா ஒரு நாள் பேயா இருந்து பார்க்கட்டுமா சார்.."என்றேன் அவரை மடக்கிய தோரணையுடன்.
"ஓங்கி அடிச்சேன் மிச்சம் இருக்குற எல்லா நாளும் நீ பேயாத்தான் இருக்கனும்..மூடிட்டு வேற கேள்வி
கேளு.."
"ஸாரி பேயி..உங்களுக்கு இலக்கிய ஆர்வம் உண்டா..?"
"அந்த கருமாந்துற ஆர்வத்துலதான் நான் பேயாவே
ஆனேன்.." பேய்க்கு
கண்கலங்குகிறது.
"கொஞ்சம் விவரமா சொல்லுங்க.."
"நான் சாகுறதுக் முன்னாடி... எங்கப்பா ஒரு பச்சிலப்புடுங்கியா இருந்தாரு..நானும் அவரமாதிரியே ஆயிறக் கூடாதுனு சிகப்பு இலை விளையிர பக்கத்து ஊருக்கு எனனை அனுப்பி வச்சாரு..அங்கதான் அந்த நாதாரிக் கூட்டத்தை சந்திச்சேன்..
ஒரு செவத்த மூதிதான் என்னை அவர்களிடம் அறிமுகப் படுத்தி வச்சான்..மாப்ளே இவங்கெல்லாம் தீவிர இலக்கிய வட்டத்துல இயங்குபவர்கள்..இவங்ககூட இருந்தா உன்னோட (சின்னவயசு கனவான) கதை எழுதும் திறமைக்கு விளக்கேத்தி வைப்பாங்கன்னு சொன்னான்..ஆனா அப்பத் தெரியல..அவங்கெல்லாம் ஒன்னா கூடி ஒப்பாரி பாடி கொள்ளி வைப்பாங்கனு.." என்று நிறுத்திய பேய் மறுபடியும் ஒரு கட்டிங்கைப் போட்டது..
மீண்டும் பேசத் தொடங்கியது...."நீங்க வாங்க பாஸ்..அடுத்த வாரம் கீதா ஹால்ல மூனுநாள் நம்ம 'பட்டை தீட்டும் பட்டறை' நடக்குது..பெரிய எழுத்து ஆளுமைகள் எல்லாம் வராங்க..நிச்சயம் உங்களுக்கு யூஸ்புல்லா இருக்கும்..வரும்போது ஒரு ரெண்டாயிரம் பணமும்..ஒரு கேஸ் ராயல் சேலஞ்சும் கொண்டு வந்திடுங்க.என்றார்கள் அந்த நாதாரிகள்..அப்பவே நான் சுதாரிச்சிருனும்..ஆனா இந்த பாழாய் போன ஆர்வம் கண்ண மறைச்சிருச்சு... கண்ட இடத்தல லொல்பட்டு அடுத்த வாரம் அவங்க சொன்னவற்றை வாங்கிட்டுப் போனேன்..அங்கே.." என்று நிறுத்திய பேய்..
"எப்படியும் நீ சொல்லாத்தான் போற..நானே சொல்லிறேன்..நேயர்களே..

stay tune..."

No comments:

Post a Comment