Saturday, December 27, 2014

கதவுகள் - சிறுகதை - ராகவன்



சிறுகதைப் போட்டி எண்-2

எழுதியவர் - ராகவன்

கதவுகள்
"ஹலோ .. அட்மின் ? கார்த்திக் மணி?"
"வணக்கம் லவ்வரு .. நீங்க எழுதலியா சிறுகதை?"
"எனக்கு இந்த பேயில நம்பிக்கை கிடையாது ப்ரோ .. ஆனா பயம் மட்டும் உண்டு .. எதுக்கு வம்பு"
"சும்மா எழுதுங்க ப்ரோ"
"நமக்கு காமிக்ஸ் விமர்சனங்கள் தான் வரும் - அதுவும் கெட்ட வார்த்தை கலந்து .. என்னத்த கதை எழுதறது .."
"இப்போ இங்க என்ன சுஜாதாவும், கல்கியுமா எழுதுறாங்க? சும்மா குதிங்க ப்ரோ"
"இந்த ரூல்ஸ்ல கொஞ்சம் டவுட் ... chat பண்ணுவோமா ?"
"சரி தலைவா சொல்லுங்க .."
.......
.......
"சரி கார்த்திக் டைம் ஆச்சு. தூங்கப் போறேன் காலேல ட்ரை பண்றேன் .... C U"
 "
---
சில மணிநேர அவசர உறக்கத்துக்கு பின் நடுநிசியில் விழித்தெழும் காமிக் லவர் மறுபடியும் facebook கதவுகள் க்ரூப்பில் ....
"அட கார்த்திக் இன்னும் தூங்கலியா?"
"இல்ல ப்ரோ .. கொஞ்சம் வேலை இருந்துது"
"சரி யோசிச்சு பார்த்தேன் .. பேய் என்பது எப்டி பேசிக்கா உருவாகுது ..."
"நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கும் ஆத்மாக்கள் பேயா வரும் ..."
"அது சரி - விட்டல்லாச்சார்யா சமாசாரம் .. எப்டி ஒரு கதைக்குள்ள பேய நோழைக்கிறது?"
"நாம நோழைக்க வேணாம் லவர்ஜீ. அதுவே நோழைஞ்சுக்கும்  "
"ஓகே கார்த்திக் .. இன்னும் சில points ..."
லொட் லொட்டென்று டைப் அடித்த படி காமிக் லவர் தூங்கிப் போகிறான் !
---
பழைய சூப்பர் ஸ்டாரின் புதிய டப்பா படத்தில் வரும் டுபுக்கு பாடல் ஒலிக்க கார்த்திக் தனது செல் போனை எடுக்கிறான்.
"ஹலோ கார்த்திக் .. நான் காமிக் லவர் .. என்ன குரூப்பில ஒரே confusion?"
"எனக்கும் தெரில காமிக்கு .. உங்களோட பேசிக்கிட்டே அப்டியே தூங்கிட்டேனா ... காலைல எழுந்து குரூப்ப பார்த்தால் இப்டி ஒரு கலவரம்"
"நானும் அப்டியே கண்ணசந்துட்டேன் ... அறிவிச்சு மூணு நாளுதான் ஆகியிருக்கு ... ஒரு மாசம் டைம் இருக்கு .. அதுக்குள்ளே முடிவு சொல்லியாச்சு? அதுவும் நான் எழுதின கதைக்கு ??!!! எப்போ எழுதினேன்னு புரீலையே - உங்களிடம் நேற்று கேள்விகள் தானே கேட்டுக்கிட்டிருந்தேன் - நைட்டு"
"எனக்கும் புரீல லவ்வரு .. உங்களுக்கு பதில லொட்டு லொட்டுன்னு டைப் பண்ணிக்கிடிருந்தேன் .. முழிச்சுப் பார்த்தால் கலவரம் - நீங்க எழுதின கதைய தேர்ந்தெடுத்து அதுக்குள்ள சிறந்த கதையா நானே அறிவிச்சிருக்கேன் .. எப்படி?"
ராகவன் விழித்துக்கொண்டே பல் துலக்கச் சென்றான். கணிணி மானிட்டரில் ஒரு wordpad பைல் திறந்திருந்தது. அவன் நேற்று கார்த்திக்குடன் பேசிய சில குறிப்புக்களை எழுதியிருந்தான். ஒன்று HIGHLIGHT செய்யப்பட்டிருந்தது ...
"நிறைவேறாத ஆசைகளுடன் மரணிக்கும் ஆத்மாக்கள் ..... "
முற்றும்

No comments:

Post a Comment