அத்தியாயம் மூன்று
எழுதுபவர் : சிவக்குமார் கனகராஜன்
தேசிங்கு கூஜா : வீரர்களே நமது மாமன்னர் ஷரத் சப்ஜியின் கனவு நனவாக வேண்டும், மதுரை மீண்டும் நம் கட்டுக்குள் வர வேண்டும், எனது பாட்டனாரின் பாட்டனார் ஆளு சப்ஜி மதுரையை கப்பம் கட்ட வைத்தவர் அவர் வழி வந்த நமது மாமன்னரின் வேண்டுகோளுக்கிணங்க தளபதி ஷாஜிச் சாமியோடு இங்கு முகாமிட்டுள்ளோம். இன்னும் மூணு வார காலத்தில் மீனாட்சி ஆளும் நகரம் நம் கட்டுக்குள் வர வேண்டும். செய்வீர்களா? நீங்கள் செய்வீர்களா?
வீரர்கள் கோரஸாக : செய்வோம்... செய்வோம்....
பால கணேசரின் இல்லம். மதியாலோசனை.
பங்கேற்பு : அகண்ட மணி, போர்ப் பிரபலம், சிவ மைந்தன், பால கணேசர்
பா.க : இந்தப்போர் நமக்கு வாழ்வா சாவா நிலை, மராட்டியர்களை நிரந்தரமாக நாம் விரட்டியடிக்க வேண்டும், மதுரை மராட்டியனின் நிரந்தர பயமாக வேண்டும்
அ.ம : ஆம் கணேசரே, என் ரத்தம் கொதிக்கிறது, புஜங்கள் துடிக்கிறது, எதிரியின் தலயை கொய்யும் வரை ஓயாது என் ஆத்திரம்
போ.பி.தி : (சிவ மைந்தனிடம் மெதுவாக) இவன் ஒருத்தன், இந்த நிலையிலும் நகைச்சுவையா, உயிர் பிரச்சினையப்பா இது, ஆனால் ஒன்று நன்கு பயிற்சி செய்துள்ளான் இவ்வாறு கொந்தளிக்க, அவன் கண்ணாடி முன் நின்று பிதற்றும் போதே எனக்கு மெல்லிய சந்தேகம் வந்தது. ஏனையா இதற்கெல்லாமா பயிற்சி?
சி.மை : கணேசரே உங்கள் வியூகம் என்ன, மராட்டியர்கள் மதுரைக்கு தெற்கே நூற்றிருபது கல் தொலைவில் முகாமிட்டுருக்கிறார்களாம்.
பா.க : என் ஒற்றன் கருணா இந்தத் தகவலையும் படை விவரத்தையும் தெரிவித்தான், நாம் குதிரைப் படையுடன் சென்று தாக்குவதே நமக்கு அனுகூலம்.
போ.பி.தி : என்ன குதிரையா? அது மட்டும் வேண்டாம் கணேசரே நாம் தேரில் சென்று தாக்குவோம், ஒரு இதுவாய் இருக்கும்.
அ.ம : அடேய் வெதர் வீங்கி நிறுத்து உன் சாகசத்தை, உன்னால் முடியாதென்பது மக்களுக்கு வேண்டுமானால் தெரியாமலிருக்கலாம் எங்களுக்குத் தெரியாதென்று நினைத்தாயா?
சி.மை : பொறுமை அகண்டவரே
போ.பி.தி : விடுமையா சிவ மைந்தா, உமக்கும் தெரிந்துவிட்டதா அகண்டவா?
பா.க : சரி விஷயத்திற்கு வாருங்கள், நமது வியூகம் என்ன?
போ.பி.தி : தளபதியாரே நான் சொல்வதை பொறுமையுடன் கேளுங்கள், நான் வீரத்தில் சற்று சளைத்தவன் தான் ஆனால் வியூகத்தில் மதி யூகத்தில் இங்கிருக்கும் அனைவரையும் விட உயர்ந்தவன், இல்லாது போனால் இத்தனை போர்க்களம் கண்ட பிறகும் சிறு காயம் கூட கிஞ்சித்தும் இல்லாமலிருப்பது சாத்தியமா ? யோசியுங்கள்.
அ.ம: பிறகு அந்த வெதரடி வேந்தே என்ற பட்டம் எவ்வாறு வந்தது ஈனப் பயலே?
அ.ம: பிறகு அந்த வெதரடி வேந்தே என்ற பட்டம் எவ்வாறு வந்தது ஈனப் பயலே?
போ.பி.தி. அய்யோ சற்று பொறுமைய்யா அகண்டவா, பால கணேசரே, என் யோசனைக்குச் சற்று செவி மடுங்கள்.
பா.க : என்ன உன் யோசனை?
போ.பி.தி : அது புத்திசாலிகளுக்கு அழகு. தற்பொழுது மராட்டியர்கள் மடுரைக்குத் தெற்கே நூற்றிருபது மைல் தொலைவில் உள்ளார்கள் அல்லவா? அங்கிருந்து அவர்களை வடக்கே நகர்த்த வேண்டும், நாம் அறுபது மைல் தொலைவில் அவர்களை அலைக்கழிப்போம்.
பா.க : பிறகு
போ.பி.தி : அங்கிருந்து அவர்களை வட மேற்கே ஒரு இருநூறு மைல் தொலைவுக்கு இழுத்துச் செல்வோம்
அ.ம : அதனால் என்ன பயன்?
போ.பி.தி : இது கேள்வி, இன்னும் ஒரு மூன்றே மூன்று மைல் மட்டும்தான், மராட்டிய மாநிலம் வந்துவிடும், சொந்த ஊரைப் பார்த்த மகிழ்ச்சியில் போர் வீரர்கள் சொந்த பந்தங்களைப் பார்க்கப் போய் விடுவார்கள். ஹா ஹா. போரிடாமலே வெற்றி. அது வரை நான் இங்கு தங்கியிருந்து மதுரயை நன்கு நிர்வாகம் செய்வேன், ஏதேனும் போர் யோசனை வேண்டுமானால் தூதனிடம் சொல்லி அனுப்புங்கள். என்ன சொல்கிறீர்கள்???
நாயக்க வீரன் செய்ததை அதே காரியத்தை அதே இடத்தில் பால கணேசனார் மீண்டும் செய்தார்.
தொடரும்...
மேலதிக விவரங்களுக்கு : கதவுகள்

படிச்சு படிச்சு சிச்சிகினே இக்கறேன்.... செம ஜி carry on....
ReplyDelete